WhatsApp Channel
2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது 4 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ள இடத்தில் அகலமான சாலை, சுற்றுச்சுவர் தவிர கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. இது தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மாணவர்களுக்கான விடுதி மற்றும் பணியாளர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.
Discussion about this post