WhatsApp Channel
செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்ய செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அவரை கைது செய்யும் நோக்கில் அமலாக்கத்துறை ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளதாகவும், முழுமையான ஆவணங்களை வழங்காமல் விசாரணையை மேற்கொள்வது முறையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
Discussion about this post