WhatsApp Channel
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கி மக்கள் குறைகளைக் கேட்டறிகின்றனர்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களை விரைவாகவும், தடையின்றியும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் 4-ம் தேதி புதன்கிழமை குறிப்பிட்ட வட்டத்தில் கலெக்டர்கள் தலைமையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இன்று தொடங்கும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று 24 மணி நேரமும் தங்குவார்கள். இத்திட்டத்தின்படி, கலெக்டர்கள் இன்று காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்குவார்கள்.
அந்த கிராமத்தில் தங்கி பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு நடத்த உள்ளனர்.
கள ஆய்வின் போது பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கவும், திட்டங்களை விரைவுபடுத்தவும் கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும், கலெக்டர்கள் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post