WhatsApp Channel
கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மருந்துக் கடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 34). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த களத்தூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி பெயரில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
இங்கு அசகளத்தூரை சேர்ந்த சிவகுரு மனைவி கவுதமி (29) ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருந்தகத்தில் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வதாக வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தலைமை மருத்துவர் அகிலன் அளித்த புகாரின் பேரில், வேப்பூர் போலீஸார் மருத்துவக் குழுவினருடன் சம்பந்தப்பட்ட மருந்தகத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மருந்துக் கடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் மருந்துக்கடை முன் நிறுத்தியிருந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான சொகுசு காரை சோதனையிட்டபோது, கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? கண்டறியும் ஸ்கேன் கருவி இருந்ததால். இதையடுத்து மணிவண்ணன், கவுதமி, தினேஷ், கண்ணதாசன் ஆகிய 3 பேரையும் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-
மனைவி பெயரில் மருந்துக் கடை நடத்தி வரும் மணிவண்ணன், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களை புரோக்கர்கள் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுபிடித்து, கார்களில் அழைத்து வந்து, ஸ்கேனிங் கருவி மூலம் நடமாடி வருகின்றனார். ஓடும் காரில் ஸ்கேன் கருவி மூலம் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்யப்பட்டதும், கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து குறிப்பிட்ட தொகை பெறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கவுதமி உடந்தையாக இருந்ததும், அச்சகளத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் தினேஷ் (22), குமாரசாமி மகன் கண்ணதாசன் (29) ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மணிவண்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கேனிங் கருவி, சொகுசு கார் மற்றும் மருந்தகத்தில் இருந்த கருக்கலைப்பு மாத்திரைகள், மாத்திரைகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post