WhatsApp Channel
நிலுவையில் உள்ள பழைய வரிக் கோரிக்கைகள் திரும்பப் பெறப்படுவதால் சுமார் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.
நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, வரி விதிப்பில் மாற்றம் இல்லை என அறிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள நேரடி வரி பாக்கிகள் தொடர்பாக வருமான வரித்துறையிடம் முறையிட்டு போராடி வரும் வரி செலுத்துவோருக்கு இந்த பட்ஜெட்டில் நிவாரணம் அறிவித்துள்ளார். அதாவது, 1962 ஆம் ஆண்டு முதல் பிரச்சனையில் இருந்த நேரடி வரிக் கோரிக்கைக்கு தீர்வுத் திட்டத்தை அறிவித்தார்.
அதாவது, 2009-2010 நிதியாண்டில் ரூ.25,000 வரையும், 2010-11 முதல் 2014-15 நிதியாண்டில் ரூ.10,000 வரையும், நேரடி வரிக் கோரிக்கைகளைத் திரும்பப் பெறாமல் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார். இந்த வரி பாக்கி தள்ளுபடி திட்டத்தால் சுமார் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள் என்றார். வரி செலுத்துவோரின் சேவைகளை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
நிலுவையில் உள்ள வரிக் கோரிக்கைகள் வரி செலுத்துவோருக்கு பணத்தைத் திரும்பப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்துகின்றன. அதாவது, முந்தைய ஆண்டுகளின் வரிக் கோரிக்கைகள் நிலுவையில் இருந்தால், நடப்பு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சரிபார்த்து, பணத்தைத் திரும்பப்பெறும் பணியை வருமான வரித்துறை முடிக்காது. தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி தகராறு தீர்வுத் திட்டம், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post