WhatsApp Channel
ஊழல் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள பழங்குடியினர் மாவட்டமான பஜாரில் சுயேச்சை வேட்பாளர் ரெஹான் ஜெப் கான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது 4 உதவியாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் ஜெப் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார். அவரது உதவியாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊழல் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. எல்லையில் இருபுறமும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளனர். எனினும் இந்த தாக்குதலை நடத்தியது யார் என தெரியவில்லை.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் சில செயற்பாட்டாளர்கள் செவ்வாயன்று பலுசிஸ்தானின் குவெட்டாவில் பேரணி நடத்தினர். கட்சியின் கொடியை ஏந்தியவாறு இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அக்கட்சியின் 3 தொண்டர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
Discussion about this post