WhatsApp Channel
மயிலாடுதுறையில் சிறுத்தையை தேடும் வேட்டை இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று முன்தினம் வெளியானது.
இதையடுத்து போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் சிறுத்தையை பிடிக்க விரைந்து வந்தனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக அத்தியாவசிய காரணமின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிறுத்தைப்புலி தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாணவர் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செம்மங்குளம், ஆரோக்கியபுரம் பகுதிகளில் இயங்கி வரும் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணி இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. சிறுத்தையை பிடிக்க ராட்சத வலைகள், கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியநாதபுரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை, சித்தர்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சித்தர்காடு அருகே தண்டபாணி செட்டித்தெருவில் ஆடு கடித்து இறந்து கிடக்கிறது. ஆட்டை சிறுத்தை வேட்டையாடியதா என மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க சித்தர்காடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Discussion about this post