WhatsApp Channel
இங்கிலாந்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த கணினி அறிவியல் பட்டதாரி சௌரஜித் தேப்நாத் வினாடி-வினா போட்டியில் இடம் பெற்றார்.
இங்கிலாந்தின் பிரபல பிபிசி தொலைக்காட்சி ‘யுனிவர்சிட்டி சேலஞ்ச்’ என்ற வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது. நாட்டிலேயே கடினமான வினாடி வினா போட்டியாக கருதப்படும் இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்க ஆர்வமாக உள்ளன.
இந்த வினாடி வினா போட்டி சமீபத்தில் தொடங்கிய நிலையில், அதன் அரையிறுதி சுற்று கடந்த வாரம் நடந்தது. இந்தப் போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு ஒன்று கலந்துகொண்டது. கொல்கத்தாவைச் சேர்ந்த கணினி அறிவியல் பட்டதாரியான சௌரஜித் தேப்நாத் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
போட்டியில் கேட்கப்பட்ட பல கடினமான கேள்விகளுக்கு சௌரஜித் தேப்நாத் திறம்பட பதிலளித்தார். இதன் மூலம் அவரது அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டி லண்டனில் வரும் 8ம் தேதி நடக்கிறது.
Discussion about this post