WhatsApp Channel
அ.தி.மு.க., சின்னத்தை முடக்க, சிலர், தி.மு.க.,வுடன் சேர்ந்து சதி செய்தனர். ஆனால் அது வெற்றிபெறவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம். அது இருண்ட காலம் என்று எங்கள் ஆட்சி பற்றி முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆட்சியை யார் மீது குறை கூறுகிறீர்கள்?.. திமுகவின் இந்த 3 ஆண்டு ஆட்சி இருண்ட காலம்.
திமுக 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. மக்களுக்கு என்ன செய்தது. 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளீர்கள். மக்களுக்கு என்ன செய்தீர்கள்? மத்தியில் ஆட்சிக்கு வரும் காங்கிரஸ், பா.ஜ.க. திமுகதான் மாறி மாறி ஆதரவு கொடுத்தது.
பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை, மக்கள்தான் முக்கியம் என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.
தமிழகத்தில் செல்வாக்கை இழந்த ஸ்டாலின், இந்தியா கூட்டணி என்று சொல்லி தேர்தலை சந்திக்கப் போகிறார். இந்திய கூட்டணி பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. திமுகவுடன் சேர்ந்து அதிமுக சின்னத்தை முடக்க சிலர் சதி செய்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை,” என்றார்.
Discussion about this post