ஜிடிபி வளர்ச்சி: காங்கிரசின் 60 ஆண்டுகளுக்கும், பாஜகவின் வேகத்துக்கும் அண்ணாமலை ஒப்பீடு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில், “நாட்டின் ஜிடிபி 1 டிரில்லியன் டாலரை எட்ட காங்கிரஸ் ஆட்சியில் 60 ஆண்டுகள் எடுத்தது. ஆனால் இன்று இந்தியாவின் ஜிடிபி 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதாகக் கூறியதற்கு எதிராக ப.சிதம்பரம் ‘எக்ஸ்’ தளத்தில் விமர்சனம் செய்திருந்தார். இதற்காக அவர் இந்தியாவின் தற்போதைய ஜிடிபி நிலையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை, “2009–2014 காலகட்டத்தில் காங்கிரசின் யூபிஏ ஆட்சியில் தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்காக வருடத்திற்கு சராசரியாக 900 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது” என்றும் கூறினார்.

மேலும், 2025-26 நிதியாண்டுக்காக மட்டும் தமிழ்நாட்டின் ரயில்வே வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் அவர் வலியுறுத்திய தகவலாகும்.

Facebook Comments Box