மெட்ரோ ரயில்களில் 89 லட்சம் பேர் மே மாதம் பயணம்

0

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மே மாதத்தில் 89,09,724 பயணிகள் பயணம் செய்துள்ளனர். தற்போதைய நிலையில், சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மொத்தமாக 54 கிலோமீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை தினசரி சுமார் 3 லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.

பயணிகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சென்றடையும் வகையில், மெட்ரோ நிறுவனம் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதன் விளைவாக மெட்ரோவில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 89,09,724 பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். அந்த மாதத்தில் மிக அதிகமாக, மே 5-ஆம் தேதி 3,23,899 பேர் பயணித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாவது: மே மாதத்தில் QR குறியீடு மூலம் 42,33,865 பயணிகள், பயண அட்டை மூலம் 5,86,430 பேர், டோக்கன் பயன்படுத்தி 1,268 பேர், சிங்கார சென்னை அட்டை பயன்படுத்தி 40,87,992 பயணிகள் மற்றும் குழு பயணச்சீட்டு மூலம் 169 பேர் மெட்ரோ பயணம் செய்துள்ளனர்.

மேலும், க்யூஆர் குறியீடு, பயண அட்டை மற்றும் வாட்ஸ்அப் டிக்கெட் போன்ற டிஜிட்டல் பயணச்சீட்டுகளுக்கு 20% கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாகவும், இவை பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here