தாம்பரம் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு எவ்வாறு மின்சார மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன என்பதை விளக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அந்தப் பகுதியில் வசிக்கும் ராமசந்திரன் என்பவர், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசு பதிலளிக்கையில், குறித்த பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்தாலும், அதனை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவை கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகள் இருப்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டும், நடவடிக்கை எடுக்காமை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து செயல்படுவதாகத் தோன்றுகிறது எனக் கடுமையாக விமர்சித்தது.
மேலும், நீர்வளத்துறை செயலாளர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரிய தலைவர் ஆகியோரை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, குறித்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மின்சார, குடிநீர் இணைப்புகள் எவ்வாறு வழங்கப்பட்டன என்பதைப் பற்றி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. விசாரணையை ஜூலை 17-ஆம் தேதி வரை ஒத்திவைத்தும் நீதிமன்றம் அறிவித்தது.