WhatsApp Channel
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இன்று இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீன ஆயுதக் குழுக்களின் திடீர் தாக்குதல் இஸ்ரேலில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து போருக்கு தயாராக உள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் நிலைகளுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் மீதான தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 250 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேலில் எச்சரிக்கை ஒலிக்கப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதல்களை தவிர்க்க பொதுமக்கள் தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. “(இஸ்ரேலின்) ஆக்கிரமிப்பின் அனைத்து குற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று அந்த அமைப்பு கூறியது.
Discussion about this post