உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தற்போது வரை எந்த சமரசமும் இல்லாமல் நடந்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரின் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகியிருப்பதைக் காணலாம்.