WhatsApp Channel
காஸாவில் நீடித்த 2 நாள் போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை தளமாகக் கொண்ட ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டிற்குள் ஊடுருவி நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், பெண்கள், குழந்தைகள் உட்பட 240 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்து காசாவுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸை முற்றிலுமாக ஒழிப்பதாக உறுதியளித்த இஸ்ரேல், தரை, கடல் மற்றும் வான்வழியாக காஸா மீது மும்முனைத் தாக்குதலை நடத்தியது. காஸா நகரம் இடிந்து விழுந்து 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
மேலும், 50,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர், உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், போரின் அவலம் நீடித்தது.
குறித்த சர்வதேச சமூகம் உடனடியாக யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததால் யுத்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 4 நாள் போர் நிறுத்தம் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இந்த காலகட்டத்தில் இரு தரப்பிலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அந்த வகையில் 3 நாட்களில் ஹமாஸ் 40 பணயக்கைதிகளையும் இஸ்ரேல் 120 கைதிகளையும் விடுவித்தது.
இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நேற்று முன்தினம் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அதே சமயம், இரு தரப்பும் எந்தவித அத்துமீறலிலும் ஈடுபடாததாலும், 4 நாள் போர் நிறுத்தம் முறையாக கடைபிடிக்கப்பட்டு பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகள் சுமூகமாக விடுவிக்கப்பட்டதாலும் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தன.
அதன்படி மேலும் இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன. இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த 2 நாள் போர் நிறுத்தத்தின் போது கூடுதல் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
நான்கு நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்று 11 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. பதிலுக்கு இஸ்ரேல் 33 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டனர்.
4 நாள் போர் நிறுத்தத்தின் போது மொத்தம் 51 பணயக்கைதிகளை ஹமாஸ் மற்றும் 153 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டனர்.
காஸா போர்நிறுத்தம் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், 10 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட மேலும் 12 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காசாவில் இருந்து 12 பணயக்கைதிகளை எகிப்துடனான ரபா கடவு வழியாக விடுவிக்கவும் மாற்றவும் வெற்றிகரமாக உதவியுள்ளது, இது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நீட்டிக்கப்பட்ட ஆறு நாள் போர் நிறுத்தத்தின் ஐந்தாவது நாளான நேற்று.
விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post