WhatsApp Channel
மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், அவர்களை மீட்ட மீட்பு குழுவினருக்கும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது; “கடந்த நவம்பர் 12ஆம் தேதி உத்தரகாண்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து 17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களை மீட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினருக்கு வாழ்த்துகள்.
இது நமது தேசத்தின் நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
Discussion about this post