WhatsApp Channel
காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என அமெரிக்கர்கள் சிலர் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதனை நிறுத்த தயாராக இல்லை. காசாவில் இருந்து ஹமாஸ் அகற்றப்படும் வரை போர் தொடரும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த யோசனைக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரும்போதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நிராகரிக்கிறது. அது மட்டுமின்றி இஸ்ரேலுக்கு இது வரை ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.
இதனால் 30,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளால் பலர் கொல்லப்பட்டாலும், போரினால் ஏற்பட்ட பசி மற்றும் பட்டினியால் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.
சர்வதேச நாடுகளால் அனுப்பப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் எகிப்தில் உள்ள ரஃபா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் குரல்கள் எழுந்துள்ளன. காஸா மீதான போரை நிறுத்தக் கோரி நேற்று சிலர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.
300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை முற்றுகையிட்டு அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கக் கூடாது என்றும் கோஷமிட்டனர்.
காசாவில் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post