WhatsApp Channel
இது அமெரிக்காவிற்கு மிகவும் ஆபத்தான நேரம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் முக்கிய அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேலுக்கு ஈரான் விரைவில் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல்-ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவுக்கு இது மிகவும் ஆபத்தான காலம் என்றும், அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, குறிப்பாக தற்போதைய திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் எதுவும் நடக்கலாம் என்றும் கூறினார்.
Discussion about this post