78 பேர் உயிரிழப்பு: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆழ்ந்த பாதிப்பு

0

78 பேர் உயிரிழப்பு: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆழ்ந்த பாதிப்பு

ஈரானை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் மரண தண்டனைகள், முக்கிய ராணுவத் தலைவர்கள் மற்றும் அணுஇயல் விஞ்ஞானிகளை குறிவைத்து நடைபெற்றன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது வேதனையான விடயம். பல ஈரானிய நகரங்களில் உள்ள பொதுமக்கள் வாழும் பகுதிகள் மற்றும் ராணுவ தளங்கள் இஸ்ரேலின் இலக்காக அமைந்துள்ளன” என்று கூறினார்.

ஐ.நா. தலைவர் அறிக்கை

இஸ்ரேல்–ஈரான் இடையிலான பதற்றம் குறித்து “X” சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த ஐ.நா. தலைவரான அன்டோனியோ குத்ரேஸ், “இப்போது, இருதரப்புகளும் தங்களுடைய தாக்குதல்களை நிறுத்த வேண்டிய காலம் இது. அமைதியும், நட்புறவுகளும் முன்னிலை பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ஜெருசலேம் அருகே ஏவுகணை தாக்குதல்

ஜூன் 14, 2025 அதிகாலை, ஜெருசலேம் பகுதியில் சைரன் ஒலிகளும் வெடி சத்தங்களும் கேட்கப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களுக்குத் தஞ்சம் அடையும்படி, இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் தொடர்பாக, சில இடங்களில் தாக்குதல் நடந்ததாகவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் ராணுவம் தெரிவித்தது.

தாக்குதலின் பின்னணி

இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து ஜூன் 13 அதிகாலை 3.30 மணியளவில் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஈரான் முழுவதும் குண்டுகளை வீசியதாகவும், முக்கிய இடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தெஹ்ரான், இஸ்ஃபகான் மற்றும் அராக் நகரங்களில் உள்ள முக்கிய அணுஇயல் மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஈரானின் மூத்த அணுஇயல் விஞ்ஞானிகள் அப்துல் ஹமீது, அகமதுரசா, சையது அமீர் உசைன், மோட்லாபிசாடே, முகமது மெஹதி, அப்பாஸி ஆகியோர் உயிரிழந்தனர். இது, ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது அலை தாக்குதல்

இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதலில், தெஹ்ரானில் உள்ள ராணுவ குடியிருப்புகள் ட்ரோன்களால் தாக்கப்பட்டன. இதில், ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, புரட்சி காவல் படையின் தளபதி உசைன் சலாமி, மற்றும் கதம் அல் அன்பியா போர் தலைமையக தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரான் நேற்று 100 ட்ரோன்கள் இஸ்ரேல் நோக்கி அனுப்பியதாகவும், இது குறித்து ஈரான் உயர்தரை தலைவர் அயதுல்லா அலி கமேனி “இவர்கள் இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்பி விடுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” எனக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here