WhatsApp Channel
மேற்குக் கரையில் உள்ள துல் ஹராம் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
கடந்த 7ஆம் தேதி காசா பகுதியில் இருந்து செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் போன்ற ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஹமாஸ் 237 பணயக்கைதிகளை இஸ்ரேலில் இருந்து காசாவிற்கு கடத்திச் சென்றது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது.
போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது மேற்குக் கரையில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்தன. இந்த முயற்சியின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் கடந்த 24ம் தேதி அமலுக்கு வந்தது.
இதனிடையே கடந்த 6ம் தேதி மேற்குக்கரையில் உள்ள துல்ஹராம் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அகதிகள் முகாமில் பதுங்கியிருந்த ஆயுதக் கும்பல் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், ஆயுதம் தாங்கிய குழுவைச் சேர்ந்த 3 பேர் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அகதிகள் முகாமில் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கொடுத்ததற்காக 2 பாலஸ்தீனியர்கள் தாக்கப்பட்டனர். ஆயுதக் குழுவின் இந்த தாக்குதலில் 2 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர். பின்னர், ஆயுதமேந்திய குழுவினர் கொல்லப்பட்ட 2 பாலஸ்தீனியர்களின் உடல்களையும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post