WhatsApp Channel
மார்கழி மாத விழாக்களில் ஒன்றாக காசி தமிழ்ச் சங்கம் சேர்க்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கம் 2.0 குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் ஆர்.என்.ரவி, ஐ.ஐ.டி. இயக்குனர் காமக்கொடி மற்றும் கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கத்தில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், மார்கழி மாத விழாக்களில் ஒன்றாக காசி தமிழ்ச் சங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. காசிக்கும் தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகள் தொடர்பு இருப்பதாக தெரிவித்த அவர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் இவை அனைத்தும் மறைந்துவிட்டதாகவும், அவற்றை மீட்க வேண்டும் என்றும் கூறினார்.
Discussion about this post