WhatsApp Channel
நாளை மறுநாள் (2ம் தேதி) முதல் இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 23ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நாளை (திங்கட்கிழமை) இரவு நிறைவடைகிறது. இதற்காக ஏற்கனவே 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடைசி நாளான நாளை இரவு வேத மந்திரங்கள் முழங்க சொர்க்க வாசல் மூடப்படும். நம்மாழ்வார் முன்பு எழுதிய பாசுரங்களில் இருந்து 100 பாசுரங்கள் பாடப்படும். அதன் பிறகு சொர்க்க வாசல் மூடப்படும்.
தரிசன டோக்கன் மற்றும் டிக்கெட் இல்லாத பக்தர்களும் திருமலைக்கு வரலாம். இதற்கு தடை இல்லை என்றும், ஜனவரி 1ம் தேதி (நாளை) வரை கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை 2ம் தேதி முதல் இலவச தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Discussion about this post