WhatsApp Channel
ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு சனிக்கிழமையுடன் (செப்டம்பர் 30) முடிவடைகிறது.
மே 19 அன்று, ரிசர்வ் வங்கி தனது நாணய மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புழக்கத்தில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இந்த நோட்டுகளை வங்கிக் கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம் மற்றும் பிற வகைகளுக்கு மீட்டுக்கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. வங்கிக் கணக்குகளில் அவ்வாறு மாற்றுவதற்கு அல்லது பணம் செலுத்துவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்டுள்ளது.
காலக்கெடு முடிவடைவதால், அதை நீட்டிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னதாக, கடந்த 1-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளில் 93 சதவீதத்தை வங்கிகள் திருப்பி அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 நோட்டுகளில் ரூ.3.32 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதாவது 93 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன. இந்த நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 சதவீத நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட்டு ரூ.100 மற்றும் ரூ.500 போன்ற பிற மதிப்புகளில் பெறப்பட்டுள்ளன” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post