WhatsApp Channel
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்தார்.
மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் மசோதாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் வியாழக்கிழமை கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மக்வால் ஒப்புதல் மசோதாவின் நகலை ஜக்தீப் தங்கரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதையடுத்து, ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இப்போது அவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாக மாறியது.
Discussion about this post