WhatsApp Channel
உலகின் மிகப்பெரிய கடல் பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே பல மர்மங்கள் உள்ளன. புதிய கண்டத்தின் 94 சதவீதம் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளது.
உலகில் தற்போது ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 கண்டங்கள் உள்ளன. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் எப்படி இருந்தன என்ற மர்மமான நிலையில் தற்போது புவியியல் ஆய்வு விஞ்ஞானிகளால் உலகின் 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டத்திற்கு விஞ்ஞானிகள் Zeelandia என்று பெயரிட்டுள்ளனர். கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டம் 375 ஆண்டுகளாக மறைந்திருப்பதாகவும் சொன்னார்கள். இது நியூசிலாந்துக்கு அருகில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த புதிய கண்டத்தின் 94 சதவீதம் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. இக்கண்டத்தின் மொத்த பரப்பளவு 49 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். நியூசிலாந்து போன்ற சில தீவுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மடகாஸ்கர் தீவை விட 6 மடங்கு பெரியதாக கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய கடல் பசிபிக் பெருங்கடலில் ஏற்கனவே பல மர்மங்கள் உள்ளன. இப்போது அதில் ஒரு கண்டம் ஒளிந்திருப்பதாக கூறப்படுகிறது. ஜீலாண்டியா கண்டத்தைப் பற்றி இன்னும் நிறைய கண்டுபிடிக்க வேண்டும் என்று புவியியலாளர்கள் கூறுகிறார்கள். அது எப்போது தண்ணீருக்கு அடியில் சென்றது? என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கண்டம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உலகின் 8வது கண்டமாக அறிவிக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் தமிழகத்தில் இந்தியப் பெருங்கடலில் லெமூரியா கண்டம் மூழ்கியிருப்பதாகவும், இங்கிருந்துதான் தமிழர்கள் தோன்றியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 9வது கண்டம் சீலாண்டியா? விஞ்ஞானிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்
Discussion about this post