WhatsApp Channel
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Discussion about this post