WhatsApp Channel
ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை படோத்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து, ட்ரங்கல்-அசார் அருகே சாலையை விட்டு விலகி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
Discussion about this post