WhatsApp Channel
புதிய இந்தியா அரசியல் செயல்பாட்டின் அடிப்படையில் வாக்களிப்பது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.க. பெரும் வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில், மக்கள் மனதில் பிரதமர் மோடி மட்டுமே இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்;-
“மக்கள் இதயங்களில் மோடி மட்டுமே உள்ளார்.இன்றைய தேர்தல் முடிவுகள் சாதி அரசியல் முடிந்துவிட்டது என்பதை நிரூபித்துள்ளது.புதிய இந்தியா அரசியல் செயல்திறனின் அடிப்படையில் வாக்களித்து வருகிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மக்களின் மகத்தான ஆதரவிற்கு நான் தலைவணங்குகிறேன். பாஜகவின் இந்த மாபெரும் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
Discussion about this post