WhatsApp Channel
சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிஎஸ்எல்வி கவர்னர் ஆர்என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில், ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோள் நிறுவப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிமீ உயரத்தில் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு பாரதியனுக்கும் இதை விட சிறந்த புத்தாண்டு தொடக்கம் என்ன!
நமது விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்பு வானியல் கண்காணிப்பு செயற்கைக்கோளான எக்ஸ்போசாட் வரலாற்று சிறப்பு மிக்க ஏவலுக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். நமது அறிவியல் சமூகம் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
Discussion about this post