WhatsApp Channel
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் ஆர்வத்துடன் பாஜகவில் இணைந்துள்ளனர்.
உதாரணமாக, காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பங்கு வகித்த அசோக் சவான், மிலிந்த் தியோரா, பாபா சித்திக், ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜிதின் பிரசாத், பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ், ஆர்.பி.என்.சிங், ஜெய்வீர் ஷெர்கில் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரியாவிடை பெற்றுள்ளனர். இதனால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பலம் இழந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் துண்டு துண்டாக உடைந்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அடியாக முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரசை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து உத்தரபிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் விபாகர் சாஸ்திரி பாஜகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விபாகர் சாஸ்திரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இந்திய மக்கள் நேசிக்கிறார்கள். குறிப்பாக, லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற தொலைநோக்கு பார்வையை மேலும் வலுப்படுத்த மோடியால் மட்டுமே முடியும். நாட்டுக்கு சேவை செய்ய முடியும். அதனால் தான் பாஜகவில் இணைந்தேன் என்றார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், முன்னாள் எம்பியுமான அசோக் சவான் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரியும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
Discussion about this post