WhatsApp Channel
இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் வகையில் பாரத் மார்ட் என்ற பெயரில் மிகப்பெரிய வேர் ஹவுசை இந்தியா அமைத்து வருகிறது.
பாரத் மார்ட் சரக்கு வீட்டு வசதிகளை வழங்குகிறது. இந்திய நிறுவனங்கள் துபாயில் வணிகம் செய்ய விரும்பினால், இந்த கிடங்கு வசதியைப் பயன்படுத்தலாம். ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த ‘பாரத் மார்ட்’ ஒரு தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100,000 சதுர மீட்டர் பரப்பளவில், துபாயின் ஜெபல் அலி பகுதியில் வேர் ஹஸ் அமைக்கப்படவுள்ளது. இது சில்லறை விற்பனை நிலையங்கள், கிடங்குகள், அலுவலகங்கள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த மால் 2025 ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இந்திய பொருட்களை ஒரே குடையின் கீழ் வாங்க முடியும் என்பது கூடுதல் நன்மை.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
சீன அரசு, தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிநாடுகளில் கிடைக்கும் வகையில் டிராகன் மார்ட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது. சீனாவின் டிராகன் மார்ட் நிறுவனம் துபாயில் இருக்கும் நிலையில், தற்போது இந்தியா பாரத் மார்ட்டுக்கு அடிக்கல் நாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post