WhatsApp Channel
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், இப்போட்டி டையில் உள்ளது.
இதையடுத்து மூன்றாவது போட்டி இன்று சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த சப்மன் கில் டக் அவுட்டானார்.
தொடர்ந்து களமிறங்கிய ரஜத் படிதர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 33/3 என்று இருந்தது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும், ஜடேஜாவும் நிதானமாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர்.
நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 14 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 131 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய சர்பராஸ் கான், தனது அறிமுக ஆட்டத்திலேயே அற்புதமாக 62 ரன்கள் எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது.
Discussion about this post