WhatsApp Channel
2024 மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இண்டி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்றார். மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலையும் நடத்தலாம் என்றார்.
இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தங்கள் மாநிலங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது இண்டி கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், தேசியவாத மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான முஷ்டாக் புகாரி இன்று பாஜகவில் இணைந்தார்.
Discussion about this post