WhatsApp Channel
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கு, விவசாயிகளைப் பற்றியோ, காவிரி நீரைப் பற்றியோ திமுக கவலைப்படவில்லை.
பாரதிய ஜனதா கட்சியில் தமிழக தலைவர் அண்ணாலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி 40 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க திமுகவின் செயலற்ற தன்மையே காரணம். கர்நாடகாவை ஆளும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து விவசாயிகளைப் பற்றியோ, காவிரி நீரைப்பற்றியோ எந்தவித அக்கறையும் இன்றி உரிய நேரத்தில் தண்ணீர் வழங்காமல் தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், போதிய தண்ணீர் இருந்தும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்தது. அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய தி.மு.க., அதற்காக குரல் எழுப்பவில்லை.
இன்றைக்கு டெல்டா விவசாயிகள் 40 சதவீதம் மகசூல் குறைந்ததற்கு இந்த இரு மாநில திமுக காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு. போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post