WhatsApp Channel
பிரதமர் மோடிக்கு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி இரவு விருந்தளித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கத்தார் சென்றார். அவர் வந்த சிறிது நேரத்தில், அவர் கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மேற்கு ஆசியாவில் சமீபத்திய பிராந்திய வளர்ச்சிகள் குறித்து விவாதித்தனர். பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். ,” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூட்டத்தை தொடர்ந்து கத்தார் பிரதமர் விருந்தளித்தார்.
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் அகமது அல் தானியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியின் கத்தார் பயணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post