WhatsApp Channel
இன்சாட்-3டிஎஸ் வானிலை செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி இன்று எஃப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
வானிலை மாறுபாடுகளைக் கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் உதவவும் இன்சாட் செயற்கைக்கோள்கள் இஸ்ரோவால் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், இன்சாட்-3டிஎஸ் என்ற அதிநவீன வானிலை செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் இன்று (பிப்ரவரி 17) மாலை 5.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளம் 2ல் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 27½ மணி நேர கவுன்டவுன் நேற்று மதியம் 2:05 மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்பும் போது ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்திறனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Discussion about this post