WhatsApp Channel
இஸ்ரோவின் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளான ஜிஎஸ்எல்வி, எஃப்14 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
வானிலை மாற்றங்களை கண்காணிக்கவும் பேரிடர் காலங்களில் உதவவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்சாட்-3டிஎஸ் என்ற அதிநவீன செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5:35 மணிக்கு ஜிஎஸ்எல்வி, எஃப்14 ராக்கெட் மூலம் 2,274 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இது பூமியின் காலநிலை மாற்றங்களை துல்லியமாக கண்காணித்து நிகழ்நேர வானிலை தகவல்களை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post