WhatsApp Channel
மதுரை பேரையூரைச் சேர்ந்த வசுமதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், பேரையூர் சூலாபுரம் பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக இ-சேவை மையம் நடத்தி வருகிறேன்.
இந்த இ-சேவை மையத்தை மறைத்து சிலர் பலகை வைத்துள்ளனர். அதை கொஞ்சம் மாற்றி டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது மீண்டும் இ-சேவை மையத்தை மறைத்து விளம்பர பலகை வைத்தனர். இது குறித்து நான் கேள்வியெழுப்பிய போது எனது மாமியார் மற்றும் மாமனார் தாக்கப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சக்தி சுகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும், இந்த விவாகரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post