WhatsApp Channel
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் விசாரணைக்கு ஆஜராக உள்ளதால், அவருக்கு 7வது முறையாக சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுக்கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்க இயக்குனரகம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், மார்ச் 16ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
இதனிடையே, விசாரணைக்கு இன்று (பிப்ரவரி 19) ஆஜராகுமாறு 6வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் இன்று அவர் ஆஜராகவில்லை. எனவே 7வது முறையாக கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சம்மன் அனுப்பும் முன் அமலாக்கத்துறை நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Discussion about this post