WhatsApp Channel
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
15 மாநிலங்களைச் சேர்ந்த 56 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. அதன்படி காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஜே.பி.நட்டா உள்ளிட்ட 4 பாஜக உறுப்பினர்களும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா, முதல்முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post