WhatsApp Channel
2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் திறந்து வைக்க உள்ளது.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் யாத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. .
இந்நிலையில் பிப்ரவரி 28ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் குலசை ராக்கெட் ஏவுகணைக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.மேலும் அன்றைய தினம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
Discussion about this post