WhatsApp Channel
ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
15 மாநிலங்களைச் சேர்ந்த 56 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.இதில், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் எல்.முருகனின் பதவிக்காலமும் முடிகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், பா.ஜ., தேசிய தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், ராஜ்யசபா வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எல். முருகன், உமேஷ் நாத் மகாராஜ், மாயா நரோலியா மற்றும் பன்சிலால் குர்ஜார் ஆகியோர் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன்படி மத்திய மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Discussion about this post