WhatsApp Channel
உலகத் தலைவர்களின் தொகுப்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரகாசமான நட்சத்திரம் என்றும், தனது தனித்துவமான பார்வையால் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார் என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா முன்னேறி வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பிரதமரின் தலைமையில், அனைவருடனும் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையுடனும், அனைவரின் முயற்சியுடனும் ” (சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்”) நாடு முன்னேறி வருகிறது.
சமூகத்தின் எந்தப் பிரிவினரும் எந்தத் துறையிலும் புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது பின்தங்கியதாகவோ உணர்வதில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக உள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முயற்சியால், முதலீடு அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புதிய வளர்ச்சியை அடையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரின் தலைமையிலும் உத்தரபிரதேசத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, தொழிலதிபர்களுடன் இணைந்து குஜராத்தில் எப்படி மாற்றங்களை கொண்டு வந்தார் என்பதை நாடு பார்த்தது. இந்த மாற்றம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் குஜராத் மாடலைப் பின்பற்றி வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன என்றார்.
Discussion about this post