WhatsApp Channel
தமிழகத்தின் வளர்ச்சி கோபாலபுரத்தின் வளர்ச்சி அல்ல, ஏழை மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் முன்னேற்றமே நமது வளர்ச்சி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற என் மன் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி. குஜராத், டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். அங்குள்ள மக்கள் வளர்ச்சியை கண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வாக்களிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் 2014-2024 பத்தாண்டுகளில் மாறி மாறி தேர்ந்தெடுக்கப்பட்ட பங்காளிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தங்கள் தொகுதிகளுக்காகக் கூட பேசவில்லை. கூட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பது வீண்.
தமிழகத்தில் ஒரு அரசு துறை சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்ல முடியாது. கல்வித் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை என எந்தத் துறையை எடுத்தாலும், ஊழல், குடும்ப அரசியல் என்று அந்தத் துறையை சீரழித்து விட்டது. இந்த நிலை தமிழகத்தில் மாற வேண்டும். இத்தனை ஆண்டுகளாக ஊழலையும், குடும்ப அரசியலையும் செய்து வரும் பங்காளிக் கட்சிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
இந்த திருப்போரூர் தொகுதியில் தமிழ் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாமல்லபுரம் உள்ளது. 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் சிற்பங்கள், கடற்கரை கோயில், பல்லவர் வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.
நமது பாரத பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 2019 இல் சீன அதிபரை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரைத் தலைநகர் தில்லிக்கோ, சொந்த மாநிலமான குஜராத்திற்கோ, சொந்த நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கோ அழைத்துச் செல்லாமல், தமிழனின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றுவதற்காக மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்தார் நமது பிரதமர்.
மாமல்லபுரத்திற்கு வார இறுதி நாட்களில் சராசரியாக 50,000 பார்வையாளர்கள் வருகிறார்கள். நமது பிரதமர் மோடி வந்து ஒரு வாரம் கழித்து ஒரே நாளில் 1,50,000 பேர் மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். இன்று நாம் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பற்றி பேசுகிறோம். 2019-ல் மாமல்லபுரத்தில் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்திய மோடி, மாமல்லபுரத்திற்கு ஒருமுறை அல்ல இரண்டு முறை பெருமை சேர்த்துள்ளார். 2023ல், ஜி20 நாடுகளின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற W20 மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
மாமல்லபுரத்தைச் சுற்றி சுமார் 1500 சிற்பிகள் வாழ்கின்றனர். தமிழகம் சிற்பக்கலையில் சிறந்து விளங்குவதற்கு மாமல்லபுரமும் ஒரு காரணம். அயோத்தி ராமர் கோவிலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான தச்சர்கள் மற்றும் சிற்பிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக உங்கள் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர்கள். மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றலாம்.
ஆனால் தமிழக அரசால் இங்கு பேருந்து நிலையம் கூட அமைக்க முடியவில்லை. 2017ல் துவங்கிய புதிய பஸ் நிலைய பணிகள் எப்போது முடியும் என யாருக்கும் தெரியவில்லை. திராவிட ஆமை மாதிரி அரசாக, இந்த திராவிடக் கட்சிகளின் அரசு மெதுவாகத்தான் செயல்படுகிறது.
திருப்போரூர் தொகுதியில் ஒரு கட்சி சட்டமன்ற உறுப்பினர் கட்டப் பஞ்சாயத்து நடத்தி வசூல் செய்கிறார். தேர்தலுக்கு முன், சட்டம்-ஒழுங்கு காவல்துறை இயக்குநரின் கையில் இல்லை, சென்னை மாநகர காவல் ஆணையர் இங்கு இருப்பவர்கள் கையில் இல்லை என பொறுப்பற்ற கருத்துக்களுக்கு பெயர் போன எஸ்.எஸ்.பாலாஜி அவர்தான். அவரால் தொகுதிக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.
தமிழகத்தின் வளர்ச்சி என்பது கோபாலபுரத்தின் வளர்ச்சி அல்ல. ஏழை மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் வளர்ச்சியே நமது வளர்ச்சி. நம் நாட்டின் வளர்ச்சி. ஐந்தாண்டுகளில் 3.50 லட்சம் அரசு வேலை வழங்குவோம் என ஆட்சிக்கு வந்த திமுக, உதயநிதியை அமைச்சராக்குவதில் முழு கவனம் செலுத்தி, 33 மாதங்களில் 10,600 இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளது.
லட்சக்கணக்கான இளைஞர்களை ஏமாற்றி விட்டது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இதுவரை அரசு வேலை கிடைக்காத குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அறிவித்து நிறைவேற்றுவோம்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மத்திய அரசின் திட்டங்களை, தங்கள் திட்டங்களாக தி.மு.க., அறிவித்துள்ளது. புதிய திட்டங்கள் இல்லை. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படவில்லை. பெயரளவில் பல திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்காமல் திமுக ஏமாற்றியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, நம் ஊரையும், நம் தொகுதியையும், நம் மக்களையும் முன்னேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் ஊழல் அரசியலையும் நடத்தும் பங்காளிக் கட்சிகள் வேண்டாம். ஊழலற்ற நேர்மையான நல்லாட்சி தொடர இம்முறை தமிழகமும் துணை நிற்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை தேர்வு செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க செய்வோம் என்றார் அண்ணாமலை.
Discussion about this post