WhatsApp Channel
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலக வல்லரசாக வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் என்றும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே அவரது லட்சியம் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதற்கான லட்சிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளதாக எல். முருகன் கூறினார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். 17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். இந்தியில் மோதி என்று அழைக்கப்படும் முத்து நகரமான தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி இன்று வந்தடைந்தார். ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்குவதற்காக தமிழகம் வந்துள்ளார்.
மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தமிழகத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொண்டு வருகிறார். கடந்த முறை தமிழகம் வந்து திருச்சி விமான நிலையத்தை திறந்து வைத்து தமிழகத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை வழங்கினார்.
இரண்டே மாதங்களில் ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தற்போது கொடுத்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை வழங்கியுள்ளார். இதனால் தமிழகம் மிகவும் வளர்ந்த மாநிலமாக உள்ளது.
சந்திரயான் 3 என்பது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலமாகும். அதை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். விண்வெளித் துறையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.
2047-க்குள் இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதுதான் பிரதமர் மோடியின் ஒரே தொலைநோக்கு.இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். அதற்கான லட்சிய நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளதாக எல்.முருகன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Discussion about this post