WhatsApp Channel
மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.
தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக தேர்தல் ஆணையர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. லோக்சபா தேர்தலை நடத்த நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். இந்த ஆண்டின் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.
நம் நாட்டில் தேர்தல் திருவிழா போல் நடத்தப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு தேர்தலும் எங்களுக்கு சவால்கள் நிறைந்தது. தேர்தல் திருவிழாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்.
லோக்சபா தேர்தலில் வாக்களிக்க 97 கோடி வாக்காளர்கள் தயாராக உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். 1.50 கோடி தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். இந்த லோக்சபா தேர்தலில் 1.82 கோடி வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். அவர்களில் 82 லட்சம் பேர் மாற்றுத் திறனாளிகள்.
இந்த தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகளும், 48,055 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இவ்வாறு ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
Discussion about this post