WhatsApp Channel
இந்த லோக்சபா தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்கள், ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் வயதான வாக்காளர்களின் எண்ணிக்கையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
அதன்படி, தற்போது இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 96.88 கோடி.
மொத்த வாக்காளர்கள்: 96,88,21,926
ஆண்கள் – 49,72,31,994
பெண்கள் – 47,15,41,888
மூன்றாம் பாலினம் – 48,044
மாற்றுத்திறனாளிகள் – 88,35,449
18 – 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்கள் – 1,84,81,610
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் – 82 லட்சம் பேர்
100 வயதுக்கு மேற்பட்டவர்கள் – 2 லட்சத்து 18 ஆயிரம் பேர்
இந்தியாவில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் – 82 லட்சம் பேர், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் – 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மேலும்,. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
Discussion about this post