WhatsApp Channel
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:பிரதமர் மோடியின் சாதனைகளை வீடு வீடாக மக்களுக்கு தெரிவிக்கும் பணியை செய்ய வேண்டும்.இதன் மூலம் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். .
மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. மறுபுறம் இந்திய கூட்டணியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் கட்சிகள் உள்ளன. 2ஜி அலைக்கற்றை ஊழல், அகஸ்டா ஹெலிகாப்டர் ஊழல், காஷ்மீர் ஊழல் செய்தவர்கள் இந்திய கூட்டணியில் உள்ளனர்.
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை. 40 ஆண்டுகளாக மோடியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். மோடி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கிறார். அவர் ஒரு நாளும் விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் கோடை காலம் வந்தவுடன் ராகுல் காந்தி விடுமுறைக்காக வெளிநாடு செல்கிறார். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து பிரிவினருக்கும் பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்திற்கு எதுவும் நடக்கவில்லை. ஊழல்வாதிகளைக் காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் இந்தியக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஊழல் செய்தவர்களை சிறையில் அடைத்துள்ளோம். எதிர்காலத்திலும் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவோம்,” என்றார்.
Discussion about this post