WhatsApp Channel
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய 15 நிமிடங்களில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3.5 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தாக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவின் பொருளாதார நிலை ஆகியவை சர்வதேச சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியது. இந்த மந்த நிலை இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கூட சரிவிலிருந்து தப்பவில்லை. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இன்று 6வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. 6 நாட்களில் கிட்டத்தட்ட 3000 புள்ளிகள் சரிந்துள்ளன.
டெக் மஹிந்திராவின் வருவாய் அறிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகியவற்றால் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய 15 நிமிடத்தில் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.3.5 லட்சம் கோடியை இழந்துள்ளனர். பங்குகள் தொடர்ந்து சரிவதால் முதலீட்டாளர்கள் தள்ளாடுகின்றனர்.
Discussion about this post