WhatsApp Channel
ஆப்பிரிக்காவில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு மாகாணமான வடக்கு கினியாவில் தீவிரவாதிகள் நாசகார நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள பணக்கார வைரச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்தி தனி ஆட்சியை நடத்துகிறார்கள். இந்நிலையில் ஒய்சா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் திடீரென அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
கண்ணில் பட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள் தப்பியோடினர். இது குறித்து காங்கோ ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 26 பேர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
Discussion about this post